செவ்வாய், 12 மே, 2009

சென்ரியு

மழைநாள் கவலை
காளான்களை எண்ணுவதா?
கட்சிகளை எண்ணுவதா?


ஆயிரம் பேரோடு
வேட்பு மனுத்தாக்கல்
ஐம்பது வாக்குகள்


சட்டம் ஒழுங்கை
காப்பாற்ற முடியவில்லை
சட்டசபையில்


பதவி இழந்த அமைச்சர்
அறிக்கை
இனி நாட்டுக்கு உழைப்பேன்
- ஈரோடு தமிழன்பன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக