

பிப்ரவரி 14
எந்த ஒரு கவனிப்பும் இன்றி கழிந்து சென்றது என்னுள்
கேள்வியை எழுப்பியது
என்ன ஆச்சு எனக்கு?
எனக்குள் காதல் செத்து விட்டதா....
தேடிப்பார்த்தேன் நல்லவேளை இல்லை....
ஆழப்புதைந்திருக்கும் உணர்வுகளில் ஒளிந்திருக்கும் உண்மை.
மிக மெல்லிய காதல் கவிதை.
- நன்றி: வடிகால்
http://authoor.blogspot.com
ஓட்டுநரின் விழிப்பின் மீது மட்டும்
நம்பிக்கை வைத்து
உறங்கிவிட முடிவதில்லை
பேருந்துப் பயணத்தில்
இரண்டு மூன்று சந்துகள் திரும்பி
இல்லத்தின் முன் நிறுத்திய ஆட்டோக்காரர்
பேசியதை விடவும் அதிகம்
கேட்காமல் இருந்ததில்லை ஒரு போதும்.
திரைப்படத்தின்
இடைவேளைகளில் எதிர்ப்படும் நண்பனிடம்
‘சினிமாவுக்கா?’ எனும்
அசட்டுக் கேள்வியைத் தவிர்க்க இயலவில்லை
எவ்வளவு முயற்சித்தும்.
திறமையின் பெரும்பகுதி
நல்லவனாய் நடிப்பதற்கென்றே
செலவாகிப் போகிற அபத்தத்தை
என்ன பெயரிட்டு அழைப்பது?
கனவை முழுமைப்படுத்த முடியாமலே
கலைந்து போகிறது
ஒவ்வொரு விடியற் பொழுதும்
இப்படி எதிர்மறைகளும்
இயலாமைகளும் இணைந்தே
கட்டமைக்கின்றன
இயல்பான வாழ்வை.
-நன்றி: தமிழ் மணவாளன்
கல்கி (10-08-2008).