வல்லாண்மை
பயங்கரவாதி
என்கிறான்
துப்பாக்கி
வைத்திருப்பவனை
அணுகுண்டு
வைத்திருப்பவன் !
இயக்கம்
வைக்காதே
சிலை
தொழிலாளிக்கு
எங்கும்
செயலற்று
நின்றதில்லை
இவன்
என்றும் !
தாய்
சொன்னாய்
அடிமைப்பட்டதை
தாய்மொழியும்
தாய்நாடும்
சொல்
முதலில்
தாய்
அடிமைப்பட்டதை !
போராளி
செத்தவனுக்காக
அழுதவன்
நீ
இவன்
அழுதவனுக்காக
செத்தவன் !
மண்
மண்ணில் உழவன்
வாழ்க்கை
அறுவடைக்கு
முன்
உழவன்
வாழ்வில்
மண்
அறுவடைக்குப்
பின் !
தேர்தல்
'ஏழைகளின்
நண்பன்
நான்'
இம்முறையும்
வேட்பாளர்
முழக்கம்
சேரியில்...
என்றென்றும்
நாங்கள்
ஏழையாய்...
அவர்கள்
நண்பராய்...
நாதஸ்வரம்
கலைஞன்
வாயிலிருந்து
நாதஸ்வரத்தில்
பாய்ந்தது
எச்சில்
நாதஸ்வரத்திலிருந்து
ரசிகன்
காதில்
பாய்ந்தது
தேன் !
தமிழன்
களத்தில்
இருந்த
வில்
இசை
கருவியாய்...
வேல்
சாமியாய்...
குதிரை
விளையாட்டாய்...
தமிழன்
அடிமையாய் !
ஒருமை
சட்டம்
கவனித்த
கொலைகாரனை
தண்டித்தது
நீதிபதி
சட்டம்
கவனிக்காத
கொலைகாரனை
தண்டித்தது
போராளி !
குமுறல்
செருப்பு
ஆண்டநாள்
அது
என்கிறாய்...
சொல்
செருப்பைச்
செய்தவன்
ஆளும்
நாள்
எது ?