வெள்ளி, 10 ஏப்ரல், 2009

மொழிபெயர்ப்புக் கவிதைகள்

நிலையாமை

அரசன் எவனோ குருதி வடித்(து)
ஆழப் புதைந்த சவக்குழியில்
விரைவில் முளைக்கும் ரோஜாவை
விஞ்சிச் சிவந்த மலரேது?

உருவும் அழகும் பூத்தென்றோ
உதிர்ந்த பெண்ணின் உடலந்தான்
விரையார் சோலைப் பசுங்கூந்தல்
விஞ்சை அரும்பாய்க் கொஞ்சுமடா!


வாழ்க்கையாட்டம்

இந்த வையம் இரவு பகல்
எழுதும் தாயக் கட்டமடா!

வந்த விதியோ மனிதர் தமை
வைத்துக் காயாய் விளையாடி
முந்தி நகர்த்தி நகைக்குமடா!

மூலைக் கிழுத்து வெட்டுமடா!

பிந்தி ஒவ்வொரு காயாகப்
பெட்டிக்குள்ளே வைக்குமடா!

- நன்றி: பேராசிரியர் அ. சீனிவாசராகவன்
மற்றும்
http://www.sify.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக