வெள்ளி, 10 ஏப்ரல், 2009

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் !

இன்றைய கல்விமுறையின் நோக்கமே,இருப்பதையெல்லாம்
தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது எப்படி
என்பது பற்றித்தான் இருக்கிறது.

ஒரு இலையைப் பார்த்தால் கூட,அதிலிருந்து தனக்கு
ஏதாவது கிடைக்குமா என்று சுயநலத்தோடு பார்க்கும்
மனப்பான்மை மனிதனுக்கு வந்துவிட்டது.
மரம்,காற்று,பூமிக்கடியில் புதைந்துள்ள இயற்கைச்செல்வம்
என்று எதையும் அவன் விட்டுவைக்கவில்லை.

எறும்புக்கு ஓர் உலகம் உண்டு. யானைக்கு ஓர் உலகம் உண்டு.
ஒவ்வொரு உயிரினத்துக்கும் அதனதன் உலகம் உண்டு.
இயற்கையைப் பொறுத்தவரை,
மனிதனும் மற்ற உயிரினங்களைப் போல ஓர் உயிரினம்தான்.

ஆனால்,மனிதன் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறான் தெரியுமா?

ஒருகாகம்,ஒரு பட்டாம்பூச்சி,ஒரு மனிதன் மூவரும் இறந்துபோயினர்.
மேல் உலகை அடைந்து,படைத்தவன் முன் நின்றனர்.

கடவுள் பட்டாம்பூச்சியிடம் கேட்டார்.
’’உனக்கு எங்கே இடம் வேண்டும்?’’

‘’பூமியில் பல மகரந்தச் சேர்க்கைகளுக்கு நான் உதவினேன்.எனக்கு சொர்க்கம் கிடைத்தால் சந்தோஷம்!’’என்றது பட்டாம்பூச்சி.

‘’உனக்கு!’’ என்றார்,காகத்திடம்.

‘’பல விதைகளை நான் வெவ்வேறு இடங்களில் துப்பியதால்தான்
காடுகள் வளர்ந்து பெருகின.இயற்கைக்கு உதவிய எனக்கும்
சொர்க்கத்தில் இடம் வேண்டும்’’ என்றது காக்கை.

மனிதனின் பக்கம் திரும்பினார் கடவுள்.

‘’உனக்கு எங்கே இடம் வேண்டும்’’

‘’ஹலோ,நீங்கள் உட்கார்ந்திருப்பது என் நாற்காலி.எழுந்திருங்கள்’’
என்றான் மனிதன்.

- நன்றி: சத்குரு ஜக்கி வாசுதேவ்
ஆனந்தவிகடன் (16-04-08).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக