உன் இதழ் 'தோன தோன'ப்பைக்
கேட்காமல் இரவுகளில்
தூக்கம் தொலைக்கிறேன் !
எப்படி முயற்சித்தாலும்
இரண்டு நாட்களுக்கு மேல்
வீட்டுச் சாவியைப் பத்திரப்படுத்தி
வைக்கத் தெரியவில்லை !
கண்ணாடியில் நீ
எப்போதோ ஒட்டிவைத்த
ஸ்டிக்கர் பொட்டு
இப்போது
என்னைப் பார்த்துச்
சிரிக்கிறது !?
'ஆண்ட்டி இன்னுமா வரல?'
'அக்கா எப்ப வருவாங்க?'
'டாமி ஏங்கிடுச்சில்ல!?'
அக்கம்பக்கத்தவரின் விசாரிப்பில்
என்னைப்பற்றி ஏதுமிருப்பதில்லை !
பால்காரன் மணிச் சத்தம்
பூக்காரி கூப்பாடு
ஒலிக்காத நம் வாசலில்
ஏனோ ஒரு வெறுமை !
தனிமையில் யோசித்திருக்கிறேன்
செல்போன் ஒலிக்கிறது
கோடை லீவுக்கு
அம்மா வீடு சென்ற
அன்பு மனைவி கேட்கிறாள்
"என்ன, நானில்லாதது
ஜாலியா இருக்குமே !"
- நன்றி: எம் . ஸ்டாலின் சரவணன்,
கறம்பக்குடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக