உனக்கு திருஷ்டி சுற்றி
வாசலில் உடைந்த பூசணிக்காய்
நன்றி சொன்னது…
உன் அழகு முகத்தை
மூன்று முறை
சுற்றிக் காட்டியதற்காக.
கர்ப்பக் கிரகம்
தன்னைத்தானே
அபிஷேகம் செய்துகொள்ளுமா?
நீ சொம்பில் நீரெடுத்துத்
தலையில் ஊற்றிக்
குளித்ததைப்
பார்த்ததிலிருந்து
இப்படித்தான்
கேட்டுக்கொண்டிருக்கிறேன்
என்னை நானே!
உன் பிறந்தநாளைப் பார்த்து
மற்ற நாட்கள்
புலம்பிக் கொண்டு இருக்கின்றன…
பிறந்திருந்தால்
உன் பிறந்த நாளாய்ப்
பிறந்திருக்க வேண்டும் என்று.
- தபூ சங்கர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக