கோபமாய் நீயென்னை முறைக்கும்போதெல்லாம்
எனக்கு வருத்தமாயிருக்கிறது.
ஓவியனாய்ப் பிறக்கவில்லையென !
எனக்கு வருத்தமாயிருக்கிறது.
ஓவியனாய்ப் பிறக்கவில்லையென !
***********************************************
ஒவ்வொரு சந்திப்பிலும் நிரூபிக்கிறாய்.
கவிதையென்பது எழுதப்படுவதன்று
நிகழ்த்தப்படுவது என்று !
கவிதையென்பது எழுதப்படுவதன்று
நிகழ்த்தப்படுவது என்று !
***********************************************
என் பிறந்தநாளுக்கு அனுப்ப
காதல் தேடும் வாழ்த்து
நீ !
காதல் தேடும் வாழ்த்து
நீ !
***********************************************
நான் தேடுகிறேனென்பதற்காக உடனே கிடைத்துவிடாதே.
ஊடலும் கூடலும் மட்டுமல்ல
காதலில் தேடலும் சுகம்தான் !
ஊடலும் கூடலும் மட்டுமல்ல
காதலில் தேடலும் சுகம்தான் !
- அருட்பெருங்கோ
நன்றி : http://blog.arutperungo.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக