சனி, 14 நவம்பர், 2009

கவிதைக் காதல்

எனக்கு உன்னைப்போல
கவிதையெழுதத் தெரியாதுஎன்கிறாய்.

எனக்கும்தான் !

***********************************************

கல்லூரியில் கூட
யாரையும் பார்த்து தேர்வெழுதியதில்லை.
காதலில் மட்டும்
உன்னைப் பார்த்துதான் கவிதையெழுதுகிறேன் !

***********************************************

கவிதையெழுதுவதில்
என் விரல்களை வென்றுவிடுகின்றன
உன் இதழ்கள் !

***********************************************

நீ கையொப்பமிட்டு தரும்
எந்தப் புத்தகமும்
கவிதைப் புத்தகம்தான் !

- அருட்பெருங்கோ

நன்றி : http://blog.arutperungo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக