சனி, 14 நவம்பர், 2009

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

என் எழுத்தில்
அடங்க மறுக்கும்
திமிரான கவிதை நீ!

***********************************************

என் காதலுக்கு
சிறப்பென்று சொல்லிக்கொள்ள
எதுவுமேயில்லை.
அது வெகு இயல்பானது,
என் சுவாசத்தைப் போல!

***********************************************

நீ பேசிய மொழியனைத்தும்
காதலின் தேசியமொழிதான்.

***********************************************

நீண்ட பிரிவுக்குத் தயாராகும்போது
உன் விழி திரட்டிய நீர்ச்சொட்டில்
அடர்ந்து கிடந்தது காதல்!

***********************************************

நாம் நடந்த பாதையில்
நான் மட்டும் நடக்கையில்
பிஞ்சுக்காற்று தோள்தொட
உன் விரலென்று திரும்பி
ஏமாந்திருக்கிறேன்!

- அருட்பெருங்கோ

நன்றி : http://blog.arutperungo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக