சனி, 14 நவம்பர், 2009

காதல் (திங்)கள்

நீ நினைக்கிறேன் !
நான் பேசுகிறாய் !
நமக்குள் காதல் வராமல்
என்ன செய்யும் ?

*********************************************

பூக்களற்ற தீவுகளுக்கு
மணம்வீசப் பயணிக்கிறது !
உன் கூந்தலிலிருந்து
பிரிந்த இழையொன்று !!

*********************************************

நேரில் கோபித்துக்கொண்டு
கனவில் வந்து கொஞ்சும்
மக்கு நீ !

*********************************************

குடையின்றி நீ வருகையில்
வெயிலுக்கும் மழைக்கும் சண்டை !

*********************************************

நீ நிலாச்சோறுண்ணும்
பௌர்ணமி இரவுகளில்
காதல் கள்ளுண்ணும்
நிலா !

- அருட்பெருங்கோ

நன்றி : http://blog.arutperungo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக