உன்னில் வெட்கம் ஒளிந்திருக்கும் இடத்திலெல்லாம்
கோபமும் சேர்ந்தே ஒளிந்திருக்கிறது.
மெதுமெதுவாய் வந்து சட்டென மறையும்
உன் வெட்கத்தைப் போலன்றி
சட்டென வந்து மெதுமெதுவாய்த்தான் மறைகிறது
உன் கோபம்.
அந்த ஒரு நொடி
என் காதல் காயப்படுவதெல்லாம்
உன் கோபங்களுக்கு புரிவதில்லை.
ஆனாலென்ன ?
மழையாக விழுந்தாலும்
வெள்ளமாக அடித்தாலும்
கடலாக அணைத்தாலும்
நிலத்துக்கு நீர் நீர் தான் !
ஊடலில் பிரிந்தாலும்
பேசாமல் மௌனித்தாலும்
கோபமாக முறைத்தாலும்
எனக்கு நீ நீ தான் !
துயரம் தானென்றாலும்
உன் கோபங்களை வரவேற்க
என் கோபங்களுக்கு என்றும் அனுமதியில்லை.
ஒரு மௌனம்
ஒரு மன்னிப்பு
ஒரு சின்னக் காதல்
எப்பொழுதும் இவை மட்டுமே
என்னிடமிருந்து எட்டிப்பார்க்கும்.
கோபங்கள் களையப்பட்டு
நிர்வாணமான உன் மனம்
காதலையணிந்து கொண்டு கெஞ்சும் :
‘இனிமே கோபமாப் பேச மாட்டேண்டா’
அடிப்போடி...
உனக்கிருக்கும் காதலுக்கு
நீ இன்னும் நூறு மடங்கு கோபிக்கலாம் !
கோபமும் சேர்ந்தே ஒளிந்திருக்கிறது.
மெதுமெதுவாய் வந்து சட்டென மறையும்
உன் வெட்கத்தைப் போலன்றி
சட்டென வந்து மெதுமெதுவாய்த்தான் மறைகிறது
உன் கோபம்.
அந்த ஒரு நொடி
என் காதல் காயப்படுவதெல்லாம்
உன் கோபங்களுக்கு புரிவதில்லை.
ஆனாலென்ன ?
மழையாக விழுந்தாலும்
வெள்ளமாக அடித்தாலும்
கடலாக அணைத்தாலும்
நிலத்துக்கு நீர் நீர் தான் !
ஊடலில் பிரிந்தாலும்
பேசாமல் மௌனித்தாலும்
கோபமாக முறைத்தாலும்
எனக்கு நீ நீ தான் !
துயரம் தானென்றாலும்
உன் கோபங்களை வரவேற்க
என் கோபங்களுக்கு என்றும் அனுமதியில்லை.
ஒரு மௌனம்
ஒரு மன்னிப்பு
ஒரு சின்னக் காதல்
எப்பொழுதும் இவை மட்டுமே
என்னிடமிருந்து எட்டிப்பார்க்கும்.
கோபங்கள் களையப்பட்டு
நிர்வாணமான உன் மனம்
காதலையணிந்து கொண்டு கெஞ்சும் :
‘இனிமே கோபமாப் பேச மாட்டேண்டா’
அடிப்போடி...
உனக்கிருக்கும் காதலுக்கு
நீ இன்னும் நூறு மடங்கு கோபிக்கலாம் !
- அருட்பெருங்கோ
நன்றி : http://blog.arutperungo.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக