சனி, 14 நவம்பர், 2009

காதல் செ(ய்)வ்வாய்

அணிகலன் இல்லாத கோபத்தில்
என் முத்தமெடுத்து அணிந்து கொள்கின்றன
உன் இதழ்கள் !

***********************************************

கண்ணில் முத்தமிட வந்தேன் !
இமை ()றித்துக்கொண்டது !!

***********************************************

ஆயிரம் முத்தங்களுடன்,
_____”
என்று கையொப்பமிட்ட கடிதங்கள் போதும்.
ஓர் இதழொப்பம் செய் !

***********************************************

கேட்டதும் கிடைக்கும் முத்தம் யாருக்கு வேண்டும் ?
உன் முத்தச்சண்டையை விட
முத்தத்துக்கான சண்டையே என் விருப்பம் !

***********************************************

ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
பேராசையில் நூறு கவிதைகள் நீட்டினேன்.
வெட்கத்துடன் சொல்கிறாய் -
லூசுகுட்டி குட்டியா நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம் !”

- அருட்பெருங்கோ

நன்றி : http://blog.arutperungo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக