சனி, 14 நவம்பர், 2009

காதலும் காட்சியும்

பார்வைகளை எனக்களித்துவிட்டு
வெறும் கண்களை மட்டும் வைத்துக்கொண்டு
என்ன செய்வான்?

***********************************************

எப்பொழுதும் கண்களையேப் பார்க்கிறானே
என்னைக் காதலிக்கிறானா?
கண்ணைக் காதலிக்கிறானா?

***********************************************

தினமும் பார்வையை வாங்கிக்கொண்டு
வெட்கத்தைக் கொடுக்கிறேன்.
மறுநாள் சந்திப்பிலோ வாங்கிய பார்வை அவனிடமும்
கொடுத்த வெட்கம் என்னிடமுமே மிஞ்சுகிறது.

***********************************************

ஒரே ஒரு முத்தமென்று கெஞ்சுகிறான்.
என்னிடம் இதழ்வசம் முத்தமே இல்லை.
இவனே கடன் கொடுத்தால்தான் என்ன?

***********************************************

என்ன சொன்னாலும் தலையாட்டுகிறவனை சீண்டுவதற்காகவே
சண்டை போடலாமா?’ என்று கேட்டால்
சண்டையெல்லாம் கூடாதுஎன்று சண்டைக்கு வராமல்
அதற்கும்சரியென்று தலையாட்டுகிறவனிடம் எப்படி சண்டை போட?

- அருட்பெருங்கோ

நன்றி : http://blog.arutperungo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக