சனி, 14 நவம்பர், 2009

காதல் கணங்கள்

இமைப்பொழுதிலும்
கவிதை எழுதுவேன் !

இமைப்பது நீயெனில் !!

***********************************************

நீ குடை விரித்ததும்
குடை சாய்ந்தது
மழை வண்டி !

***********************************************

இமை மூடிய கண்களில் அரைப்பார்வையுடன்
விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்
அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன
சில கவிதைகள் !

- அருட்பெருங்கோ

நன்றி : http://blog.arutperungo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக