இமைப்பொழுதிலும்
கவிதை எழுதுவேன் !
இமைப்பது நீயெனில் !!
கவிதை எழுதுவேன் !
இமைப்பது நீயெனில் !!
***********************************************
நீ குடை விரித்ததும்
குடை சாய்ந்தது
மழை வண்டி !
குடை சாய்ந்தது
மழை வண்டி !
***********************************************
இமை மூடிய கண்களில் அரைப்பார்வையுடன்
விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்
அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன
சில கவிதைகள் !
விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்
அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன
சில கவிதைகள் !
- அருட்பெருங்கோ
நன்றி : http://blog.arutperungo.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக