சந்நி தானத்தில் – அங்கே
போவ தெனில்நான் போவேன் கண்ணீர்ப்
பூவி மானத்தில்
ஆரா தனையில் ஆருயிர் வாசனை
அழகுகள் சொரிந்தேனே – தினமும்
பாரா யனமாய் உன் திருப் பெயரைப்
பாடித் திரிந்தேனே !
வேகம் குறைய வில்லை; மேலும்
வேதனை கூட்டாதே – என்றன்
பாகம் பிரியா நாயகி யேஉன்
பக்தனை வாட்டாதே !
முன்போர் சமயம் தீண்டி யவன் என
முகத்தை வெறுக்காதே – பொங்கும்
அன்போர் சமயமும் அடங்கா(து); உனைச்சரண்
அடைந்தேன் மறுக்காதே
தேவி, உனதருள் தேடிவந் தேன்; உயிர்த்
தீர்த்தம் கொடுப்பாயே – இல்லை
'பாவிஇவன்' எனப் பட்டால் எனை நீ
பலியாய் எடுப்பாயே !
சாவ தெனில் நான் சாவேன் உன்றன்
சந்நி தானத்தில் – அ ங்கே
போவ தெனில்நான் போவேன் கண்ணீர்ப்
பூவி மானத்தில் !
- மீரா.