எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளீர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்கன் தாம் கலந்தனவே
- செம்புலப்பெயநீரார்.
முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்,
கழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ,
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
'இனிது' எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே
- கூடலூர் கிழார்.
அருளும் அன்பும் நீங்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே
- கோப்பெருஞ்சோழன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக