செவ்வாய், 26 மே, 2009

எங்க ஊருக் கதையொன்னு …

அய்யாமாரே அம்மாமாரே
எல்லாந்த் தெரிஞ்ச ராசாமாரே
கொஞ்ச நேரம் நில்லுங்க …
எம்முன்னால இல்லாத
என்னாச அவரோட
கடைசியா நாம்பேசும்
இந்தப் புழுதி மேட்டுக் காதலோட
மொத்தக் கதையும் கேட்டுப்புட்டு
எந்தப்பு இதில் என்னன்னு
எதாச்சும் தெரிஞ்சதுன்னா
எங்கிட்ட சொல்லுங்க.....


எல்லாப் பெண்டுக போலவே நானும்
எட்டுப்புள்ளிக் கோலம் போட்டும்
தாயமாடக் கோடு போட்டும்
ஒத்தக் காலில் நொண்டி ஆடி
கண்ணக் கட்டிப் பாண்டி பாடி
சந்தோசமாத் தான இருந்தேன்.....


எப்ப ஒன்னப் பாத்தேனோ
அப்பவே நான் தொலைஞ்சு போனேன்
உள்ளுக்குள்ள செவந்து போனேன்.....
- நன்றி : http://www.rejovasan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக