சனி, 9 மே, 2009

இரண்டல்லாதது

பொய்-வாய்மையோடும்

இன்ப-துன்பத்தோடும்

சுக-துக்கத்தோடும்

பகலிரவோடும்

சந்திர-சூரியனோடும்

ஆண்-பெண்ணோடும்

இரண்டோடே வாழும்

அத்வைதமான வாழ்க்கையில்

இரண்டல்லாத பிரம்மம் தேடி

அத்வைதம் காணும் வழி

உண்மையோடு உறவாடும்

உன்னதமான வாழ்வென்ற

பால பாடம் கற்றுக்கொள்ள

ஆயுளில் பாதியானதே….

- நன்றி: வடிகால்

http://authoor.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக