வெகுநாட்கள் வறுத்தெடுத்த வெயிலுக்குப்
பின்னொரு மாலையில்
மழை பெய்திருந்த பொழுது
நாங்கள்
பேருந்து நிறுத்த நிழற்குடைக்குள் ளிருந்தோம்
அணிந்திருந்த உடையோ
முதுகின் மேல் பை கொண்டிருக்கும்
பொருட்கள் பற்றிய கவலையோ
தோல் காலணிகள் என்கிற ஜாக்கிரதை உணர்வோ
இல்லை வேறெதோ ஒன்றோ
மழையிலிருந்து விலகி இருக்கச் செய்திருந்தது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக