செவ்வாய், 12 மே, 2009

எங்கிருந்து வருகிறது இந்த நதி?

எங்கிருந்து வருகிறது
இந்த நதி?
மலைகளின்
மௌனம் உடைந்தா?
முகில்களின்
ஆடை கிழிந்தா?
வனங்கள் பேசிய
இரகசியங்கள் கசிந்தா?
இல்லை...
என்னிலிருந்து
என் அந்தரங்கங்களின்
ஊற்றுக்கண் திறந்து
என் மார்புகள்
புல்லரித்து
என் ரத்தக்குழாய்களில்
புல்லும் பூவும் மணந்து
என்னை முழுக்காட்டி
என்னையே கரைத்துக் கொண்டு
அங்கிருந்து வருகிறது
இந்த நதி
- சிற்பி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக