வியாழன், 7 மே, 2009

கண்ணம்மா என் காதலி - 5

தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையிலே
செண்பகத் தோட்டத்திலே,

பார்ந்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்.

வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா!
மார்பு துடிக்குதடீ!

மேனி கொதிக்குதுதடீ - தலை சுற்றியே
வேதனை செய்குதடீ!

வானிலிடத்தையெல்லாம் - இந்த வெண்ணிலா
வந்து தழுவது பார்!

மோனத்திருக்குதடீ! இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே.

நானொருவன் மட்டிலும் - பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ?

- பார'தீ'யார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக