தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையிலே
செண்பகத் தோட்டத்திலே,
பார்ந்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா!
மார்பு துடிக்குதடீ!
மேனி கொதிக்குதுதடீ - தலை சுற்றியே
வேதனை செய்குதடீ!
வானிலிடத்தையெல்லாம் - இந்த வெண்ணிலா
வந்து தழுவது பார்!
மோனத்திருக்குதடீ! இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே.
நானொருவன் மட்டிலும் - பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ?
- பார'தீ'யார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக