சனி, 9 மே, 2009

சிறு கவிதைகள்

பொய்

காமம் என்றேன்
கயவன் என்றாய்
காதல் என்றேன்
கவிஞன் என்றாய்


நட்பு

ஊரார் சொல்லும் காதலை
ஒதுக்கி வைத்திவிட்டு
என் கண்களை மட்டுமே
பார்த்துப் பேசும் உன் உறவு...


விதவை

கனவுகளுக்கு வாசல் திறந்து
வண்ணங்களை உதிர்த்த
வெள்ளைப் புறா
- நன்றி : நிலவன்
http://eerththathil.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக