எழுத்துக்களை வைத்து
விதம் விதமாகத் துள்ளிக் குதிக்கும்
வித்தாரக் கவி எழுத
எப்படியாம் முடிகிறது உங்களால் ? -
என வியந்து போகிறாய் . . .
எப்படி, எப்படி . . .?
தா . . . தை . . .
என வெறும்
இரண்டு எழுத்தை மட்டுமே வைத்துக்
குதிக்கும் நின்
பாதங்களை விடவா ?
- மகுடதீபன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக