வெள்ளி, 22 மே, 2009

இரண்டும், இருநூற்றி நாற்பத்தேழும்

வெறும் 247
எழுத்துக்களை வைத்து

விதம் விதமாகத் துள்ளிக் குதிக்கும்
வித்தாரக் கவி எழுத

எப்படியாம் முடிகிறது உங்களால் ? -
என வியந்து போகிறாய் . . .

எப்படி, எப்படி . . .?

தா . . . தை . . .
என வெறும்
இரண்டு எழுத்தை மட்டுமே வைத்துக்
குதிக்கும் நின்
பாதங்களை விடவா ?

- மகுடதீபன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக