செவ்வாய், 12 மே, 2009

மாமன் மகள்

உனக்கும் எனக்கும்
ஒரே ஊர்-
வாசுதேவ நல்லூர்...
நீயும் நானும்
ஒரே மதம்...
திருநெல்வேலிச்
சைவப்பிள்ளைமார்
வகுப்புங்கூட...
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள்-
மைத்துனன்மார்கள்
எனவே
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடைநெஞ்சம் தாம் கலந்தனவே
- மீரா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக