சனி, 9 மே, 2009

பட்டையை கிளப்பும் பாரதியின் வரிகள்

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடி துன்பம் மிக உழன்று –பிறர்
வாட பலசெயல்கள் செய்து –நரை
கூடி கிழப்பருவமெய்தி –கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல் -நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ….


- மகாகவி பாரதியார்.

நவீன பாரதி எழுதியிருந்தால்( ஒரு முயற்சி தான்) ?!

தேடி பெண் ஆர்குட் பலசென்று - பல
மயக்கும் கதை பேசிஅவளைக் கவிழ்த்து - அவள்
மனம் வாட பலானவை பேசி - பிறர்
பார்க்க பற்பல சல்லாபம் செயமுயன்று - கடை
பல சென்று கடலைபேச வளித்து - இரை
தேடித் திரியும் தெருநாயினைப் போல் - பல
வாடிக்கை மனிதரைப் போல் - நான்
விழுந்து கிடப்பேனென்று நினைத்தாயோ......

- நன்றி : நிலவன்

http://eerththathil.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக