வெள்ளி, 22 மே, 2009

எதிலாவது

மார்கழிக் காலை
மண்டையிலே சில்லென்று சிறுகாற்றுத் தாக்க,
மாசில் வீணையும் பாடல்
மனசுக்கு இதமாகக் கேட்க . . .

வாளிவாளியாகச் குளிர்ந்தநீரை
வாரி இறைத்துக் குளித்தபோதும் சரி,

குதிநடை போட்டுக் கொட்டும்
குற்றாலப் பெருக்கில் திளைத்தபோதும் சரி,

குளிர் வாசஸ்தலமெங்கும்
குதித்தோடி
வலம் வந்த போதும் சரி

வட்டவிழி சுழற்றி
வருடிவிட அப்படியே
வளைத்து ஒரு பார்வை பார்ப்பாயே

அந்தக் குளிர் இதத்தை
இதில் எதிலாவது
அனுபவித்திருக்கிறேனா நான் ?

- மகுடதீபன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக